Mnadu News

மதுரை மாவட்டத்துக்கு மே 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப். 30-ஆம் தேதியும், திக்குவிஜயம் மே 1-ஆம் தேதியும், திருக்கல்யாணம் மே 2-ஆம் தேதியும், தேரோட்டம் மே 3-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.இதைத் தொடர்ந்து, கள்ளழகர் எதிர்சேவை மே 4-ஆம் தேதியும், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிகழ்வையொட்டி, மதுரை மாவட்டத்துக்கு மே 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More