Mnadu News

மதுரை மெட்ரோ திட்டம்: மண் பரிசோதனை தொடங்கியது.

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் ஒன்றான மதுரை மாநகரில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.அதையடுத்து, திருமங்கலத்தில் இருந்து தோப்பூர், திருநகர், மதுர காலேஜ், காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம், கே.புதூர், மாட்டுத்தாவணி, உயர்நீதமன்றம் கிளை வழியாக ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த ஆய்வு செய்யப்பட்டு தமிழக அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் – ஒத்தகடை வரை உள்ள 31 கிலோ மீட்டர் தூரத்தில் 76 இடங்களில் சாலை ஓரத்தில் 30 அடி ஆழத்தில் மண் எடுத்து பரிசோதனை செய்யும்பணி தொடங்கி உள்ளது.

Share this post with your friends