மதுரை விமான நிலையத்திற்கு மதுரை மீனாட்சியம்மன் பெயரை வைக்கக்கோரி மனுவை
பரிசீலித்து ஆறு மாதத்திற்குள் உரிய முடிவெடுக்க மத்திய விமான போக்குவரத்துத் துறைக்கு
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்திரவிட்டுள்ளது.
கோவில் நகரமான மதுரை மாநகரத்தில் முக்கிய ஐக்கான பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி
அம்மன் கோவில் விளங்குகிறது. மதுரை விமானநிலையத்துக்கு சாதிய தலைவர்களின்
பெயரை வைக்க அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் கோரிக்கை வைத்துள்ளதை
அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். மதுரையின் அடையாளமாக விளங்கக் கூடிய
மதுரை மீனாட்சி அம்மனை வைப்பதால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்பதை
மனுதாரர் சார்பில் முன்வைக்கப்பட்டது.
பொதுவாக சில இடங்களைத் தவிர பெரும்பாலன அரசு பொதுவுடைமை இடத்திற்கு
இறந்தவர்களின் பெயரைத் தான் சூட்டுவார்கள். வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுளுக்கு எதற்கு
விமான நிலையத்தில் பெயர். இவர்கள் பெரியார் சிலைக்கே மதுரை வீரன் என்று பெயர்
வைப்பார்கள்.