Mnadu News

மத்தியப்பிரதேசத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஓட்டுநர் பலி.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து மத்தியப்பிரதேசம் மாநிலம் காட்னிக்கு நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில், மத்தியப்பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டம் சிங்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இதில், ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். ரயில்வே ஊழியர்கள் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனிடையே, சரக்கு ரயில் ஒன்றின் இன்ஜின் தீப்பிடித்து எரிந்ததையடுத்து சிங்பூர் ரயில் நிலையம் முழுவதும் காலி செய்யப்பட்டுள்ளது.அதோடு, பிலாஸ்பூர்-காட்னி வழித்தடத்தில் அனைத்து ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends