Mnadu News

மத்தியில் பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி அமைக்கும்: சந்திரசேகர் ராவ் நம்பிக்கை.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட அம்பேத்கர் சிலையை தறிந்த வைத்து பேசியுள்ள, முதல்-அமைச்சரும்;, பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ், ‘பாரதிய ராஷ்டிர சமிதி மராட்டியத்தில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது. மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும் இதைப்போன்ற ஆதரவை எதிர்பார்க்கிறது. நான் சில விஷயங்களைச் சொல்கிறேன். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அடுத்த அரசு நம்முடையது. இதை நம் எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம். ஆனால் விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்’ என்று கூறி உள்ளார்.

Share this post with your friends