![](https://mnadu.com/wp-content/uploads/2023/12/1842040-udhaya-1024x614.webp)
முதலமைச்சர் அறிவித்த வெள்ள நிவாரண நிதி ஒரு வாரத்தில் அனைவருக்கும் டோக்கன் கொடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் தாக்கத்தின் காரணமாக ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரணி புத்தூர் முகலிவாக்கம் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் சேர்ந்து குடியிருப்புகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரணி முத்தூர், ஐயப்பன்தாங்கல், ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது உடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
இதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெள்ள நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு வார காலத்திற்குள் அனைவருக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு நிவாரண நிதியானது வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு முதல் கட்டமாக நிதி வழங்கியது, அடுத்த கட்டமாக நிதி வழங்குவார்கள் என நம்புகிறோம் என தெரிவித்தார். மக்களுக்கு சின்ன அதிருப்தி இருக்க தான் செய்யும் யாரும் எதிர்பாக்காத மழை பெய்துள்ளது என தெரிவித்தார்.