பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி இன்று பல்வேறு கட்சியினரும் தங்களது கூட்டணி கட்சிகள் , சுயேட்சை வேட்பாளர் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்தவண்ணம் உள்ளனர். அந்தவகையில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் அதிமுக- வின் நாடாளுமன்ற தென்சென்னை தொகுதியின் வேட்பாளரான ஜெயவர்தன் தனது கட்சியினரோடும் ,ஏராளமான தொண்டர்களுடனும் ஆரவாரமாக அவரது வேட்பு மனுவை அடையாறில் தாக்கல் செய்தார். அதை அடுத்து எந்த ஒரு கட்சியினரோடும் கூட்டணி வைக்காமல் நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் சுயேச்சையாக களம் இறங்கவுள்ளார். மத்திய பெங்களூர் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக தனது வேட்பாளர் மனுவை தாக்கல் செய்தார் .