Mnadu News

மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாளை திறப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்படுகிறார். நாளை காலை 10 மணிக்கு மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

Share this post with your friends