Mnadu News

மரகத நாணயம் பார்ட் 2 பணிகள் தீவிரம்! உறுதி செய்த இயக்குனர்!

நடிகர் ஆதியை கதாநாயகனாக கொண்டு கடந்த 2017 ஆம்  ஆண்டு வெளியான படம் “மரகத நாணயம்”. இந்த படத்தில் நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், டேனியல், முனிஷ்காந்த் உள்ளிட்ட ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது. இந்தப் படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்தார். டில்லி பாபு தயாரித்திருந்தார்.

திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்த இப்படத்தின் ‘நீ கவிதைகளா’ பாடல் பெரிய அளவில் ஹிட்டடித்து, குறிப்பாக பிரதீப் குமாருக்கு ஒரு பிரேக் தந்த பாடல் எனலாம். பாடல் மட்டுமல்லாமல் படமும் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியை வைத்து ஏ.ஆர்.கே.சரவணன்  “வீரன்” படத்தை இயக்கியிருந்தார். அந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், அடுத்து “மரகத நாணயம்” படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் சரவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தையும் டில்லிபாபுவே தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனரின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட துவக்கத்தில் வெளியட படக்குழு திட்டமிட்டு உள்ளது.

Share this post with your friends