Mnadu News

மருத்துவப் படிப்பு: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது .

எம்.பி.பி.எஸ். மற்றும் பிடி..எஸ். இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. நிகழாண்டு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. இன்று விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய நடைபெற்று வருகிறது.
விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வுக்கு 147 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தகுதி பெற்றுள்ள 47 பேருக்குமே இடங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
நாளை அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7 புள்ளி 5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வும் நேரடியாக நடைபெறுகிறது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் 21ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் இணையவழியே நடைபெறவுள்ளது.
இதையடுத்து, முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்ற உடன் வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, வரும் 30 ஆம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

Share this post with your friends