Mnadu News

மருத்துவமனையில் சந்திரசேகர ராவ் அனுமதி

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததாக கூறப்படும் நிலையில்,  ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. மேலும் அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

Share this post with your friends