Mnadu News

மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா

மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிராம மக்கள் கொண்டாடும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.!!

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை பகுதியில் நக்கீரர் தவம் இருக்கும் போது அவரது தவத்தை கலைத்த கட்முகி என்ற பூதம் கடத்திச் சென்றது. அவரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மீட்டு சாப விமோசனம் நீங்க மலைமேல் தனது திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு கீரி கங்கைக்கு நிகரான காசி தீர்த்தத்தை வரவழைத்ததாக ஐதீகம். இதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டு தோறும் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழாவாக கொண்டாடுவது வழக்கம்.

இன்று மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவினை முன்னிட்டு மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் வைத்திருக்கும் வேலை பல்லக்கில் வைத்து திருவீதி உலா வந்து மலை மேல் உள்ள காசி தீர்த்தத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று பூ பல்லக்கில் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் மூலஸ்தானத்தின் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கரத்தில் இரவு வேல் சேர்க்கப்படும்.

இவ்விழாவில் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

Share this post with your friends