Mnadu News

மல்யுத்த வீரர்களின் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.

பாலியல் தொல்லை புகாருக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக ஏற்கனவே டெல்லி காவல்துறை கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த புலன் விசாரணையை கண்காணிக்கவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் வீராங்களைகளின் வாக்குமூலத்தை விரைவாக பதிவுசெய்ய கோரி வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவை டெல்லி தலைமை குற்றவியல் நீதிமன்றதில் விசரணைக்கு வந்தது.இந்த விசாரணையில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் மற்றும் புலன் விசாரணைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends