Mnadu News

மழைநீர் வடிகால் பள்ளங்கள்:தடுப்பு வைக்க தலைமைச் செயலர் உத்தரவு.

மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், பருவமழையை முன்னிட்டு. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவுபெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத நிலையில் உள்ளது. இது மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
எனவே, மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில பணிகளுக்கான தோண்டப்பட்ட பள்ளங்கள் மற்றும் குழிகள் மூடப்படாமல் இருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் மற்றும் அடையாள பலகைகள் வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஈ
அதோடு;, சாலைகளில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள கையேடு கவர் திறந்திறுப்பின, முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்கலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் தடுப்புகள், அடையாள பலகைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறும், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தொடர்புடை துறைத்தலைவர்களும் அறிவுறுத்துமாறு கேட்டுகொண்டுள்ளார்.

Share this post with your friends