Mnadu News

மாஃபியாவால் யாரையும் அச்சுறுத்த முடியாது: யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்.

உத்தரபிரதேசத்தில் லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள முதல் அமைச்சர்; யோகி ஆதித்யநாத், கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு, உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக இருந்தது, கலவரங்களுக்கு பெயர்போன மாநிலமாக இருந்தது.அதே போல்,முன்பு மாநிலத்தின் அடையாளமாக மாஃபிய கும்பல் இருந்ததோடு, அரசுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டு இருந்தது,ஆனால் இன்று மாநில அரசின் நடவடிக்கைகள் அவர்களுக்கு அதாவது குற்றவாளிகளுக்கும் மாஃபியாக்களுக்கும் நெருக்கடியாக மாறி வருகிறது. இப்போது உத்தரபிரதேசத்தில் மாஃபியாவால் யாரையும் அச்சுறுத்த முடியாது என்று கூறி உள்ளார்.

Share this post with your friends