Mnadu News

மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ,உக்ரைன் படை தொடர்ந்து முன்னேறிய நிலையில், தற்போது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று தலைநகர் கீவில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி ரஷியா கோரத் தாக்குதலை நடத்தியுள்ளது அதுபோல உக்ரைனும் கிரீமியா பகுதியில் தாக்குதல் நடத்தியது. உக்ரைனில் மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளதால் தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் அங்கிருந்து திரும்பிய மாணவர்கள் யாரும் இதுவரை உக்ரைன் செல்லவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
.

Share this post with your friends