Mnadu News

மாநகர பேருந்து சேவை எப்படி உள்ளது?: பொதுமக்களின் கருத்துகளை கேட்க போக்குவரத்துக் கழகம் முடிவு.

போக்குவரத்து சேவை தொடர்பாக பயணிகளிடம் கருத்துகளை பெற்று பேருந்துகளின் இயக்கம் மற்றும் சேவை தரத்தை அதிகரிக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தக் கணக்கெடுப்பில் பேருந்துகளின் தூய்மை, பயண வசதி, பேருந்துகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் தனிநபர் பாதுகாப்பு, சரியான நேரத்திற்கு பேருந்துகள் வருகை, பேருந்துச் சேவையின் செயல்திறன் உள்ளிட்டவை குறித்த கருத்துகள் சேகரிக்கப்பட உள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து விதமான பயணிகள் என மொத்தம் 2,310 பேரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

Share this post with your friends