முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அலுவலர் தேர்வாணையம் நடத்தும் கடைநிலை ஊழியர்கள் உள்ளிட்ட பலவகை பணியாளர் தேர்வு , ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வு ஆகியவற்றை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அதோடு, விரைவில் அனைத்து மத்திய அரசின் தேர்வுகளும் மாநில மொழிகளிலும் நடத்தப்பட்டும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More