Mnadu News

மாரி செல்வராஜ் – துரூவ் விக்ரம் கூட்டணியில் புதிய படம்! கதைக்களம் என்ன தெரியுமா?

“பரியேறும் பெருமாள்” படத்தின் மூலம் இந்திய திரை உலகில் தனக்கென தனி இடம் உருவாக்கி உள்ளார் இயக்குநர்
” மாரி செல்வராஜ் “. அந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்து அவர்களின் பாதையை பிஸியாக மாற்றியது.

2021 ஆம் ஆண்டு வெளியான “கர்ணன்” திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரையும் சமூக அக்கறை கொண்ட இயக்குநர் என்ற புகழையும் பெற்று தந்தது. தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வரும் நிலையில், மாரியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அர்ஜுன் ரெட்டி, மகான் போன்ற படங்களில் கவனம் ஈர்த்த துரூவ் விக்ரம் உடன் இணைந்து கபடி விளையாட்டை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட உள்ளது. இப்படம் அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends