தென்காசி மாவட்டம், செங்கோட்டை மேக்கரை பீட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/NEW-2.png)
அப்போது எருமைசாடி சரக பகுதிக்குள் செந்நாய்கள் கடித்து இறந்த மிளாவில் இருந்து மீளாக்கறியை சட்டவிரோதமாக எடுக்கும் போது வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/NEW-3.png)
இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட காசிராஜன், ஆறுமுகம், இசக்கிமுத்து, ஐயப்பன் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து வேட்டைக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் மிளாகறி ஆகியவை பறிமுதல் செய்தனர்.