Mnadu News

மீண்டும் இந்திய வீரரை சுட்டு கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

இந்த வருடம் நாட்டையே புரட்டி போட்ட சம்பவம் என்றால் புல்வாமா தாக்குதல்  என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிகளால் சுட்டும், மோட்டார் குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், இன்று ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள கெரி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு இந்திய வீரர் உயிரிழந்தார்.

 

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இன்றுவரை பாகிஸ்தான் ராணுவம் 110 முறை இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சமயத்தில் இது போன்ற சம்பவம் அரங்கேறியது எல்லையில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது என்பது   குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends