Mnadu News

மீனவர் சுட்டுக்கொலை: ரூ.25 லட்சம், அரசு வேலை வழங்க இபிஎஸ் கோரிக்கை.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் இறந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். அதோடு, அரசு அறிவித்த நிவாரணத்தை 25 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்துகிறேன்.” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

Share this post with your friends