சென்னையைச் சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் கடந்த ஆண்டு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி விடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் மீரா மிதுன் தலைமறைவாகி விட்டார்.
இதனிடையே, தன் மகளை பாதுகாப்பாக மீட்டுத்தரும்படி, நடிகை மீரா மிதுனின் தாயார் ஷியாமளா, சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக மீரா மிதுனை போலீசார் தேடியும் கிடைக்காத நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்மூலமாக மீரா மிதுன் இந்தியாவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்படுவார். நாட்டை விட்டு எங்கும் செல்ல முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More