Mnadu News

முதலில் நண்பர் பிறகு நாடு: நேருவை தாக்கும் கிரண் ரிஜிஜு.

காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் 5 தவறுகள் என்று அறிக்கை வெளியிட்டிருந்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ,இன்று அது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.உண்மையில் என்ன நடந்தது? காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு, ஜவகர்லால் நேரு ஏன் காலதாமதம் செய்துவந்தார். அதனால்தான், காஷ்மீருக்குள் பாகிஸ்தான் ஊடுருவ நேரிட்டது? காஷ்மீர் விவகாரத்தில் நேரு செய்த 5 மிப்பெரிய தவறுகள்தான் இதன் பின்னணியில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
,காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று மகாராஜா ஹரி சிங் மூன்று முறை வைத்த கோரிக்கைகளையும் நேரு நிராகரித்துவிட்டார். ஆரம்பகாலத்தில் காஷ்மீர் விவகாரத்தில் நேரு எடுத்த கொள்கைகள் அனைத்தும் நண்பர்தான் முதலில், பிறகுதான் நாடு என்பதையே தெளிவுபடுத்தியது என்றும் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends