Mnadu News

முதல் தபால் பெண்மணி ஆனந்தவல்லி இயற்கை எய்தினார்.

கேரளம் மாநிலத்தை சேர்ந்த கே.ஆர் ஆனந்தவல்லி ஆலப்புழாவில் உள்ள எஸ்டி கல்லூரியில் வணிகவியல் துறை பட்டம் பெற்றார். பின்னர், ஆலப்புழாவில் உள்ள தத்துபள்ளி தபால் நிலையத்தின் முதல் தபால் பெண்ணாக பணியில் சேர்ந்து, மாநிலத்தின் முதல் தபால் பெண் என்ற பெருமையை பெற்றார். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் தபால் பெண்ணாகவும், கிளார்க் மற்றும் தபால் அலுவலர் உள்ளிட்ட பணிகளில் பணியாற்றினார். இவர் பணியின்போது பல கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து தபால்களை கொடுத்து வந்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு தபால் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே ஆனந்தவல்லி இயற்கையெய்தினார்.

Share this post with your friends