Mnadu News

மும்பையில் அரங்கேறிய கொலை! சைக்கோ நபரின் வெறிச்செயல்!

மும்பை நகரத்தின் கல்யாண் மாவட்டத்தில் கோல்ஸ்வாடி என்கிற பகுதி உள்ளது. இந்த பகுதியில் பிரனிதா தாஸ் என்கிற சிறுமி டியூஷன் முடித்துவிட்டு தமது தாயுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர்களை தடுத்து நிறுத்திய நபர் சிறுமியின் தாயை தள்ளி விட்டு எதுவும் கூறாமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக சிறுமியின் மீது குத்தி உள்ளார். இதில் தடுமாறி ரத்த வெள்ளத்தில் சிறுமி தாயின் முன்பாக சரிந்து விழுந்தார்.

பரபரப்பாக இருக்கும் இந்த முக்கிய பகுதியில் இப்படி ஒரு அதிர வைக்கும் சம்பவம் மக்களை உறைய வைத்தது. இது குறித்து கோல்ஸ்வாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் கத்தியால் குத்திய அந்த மர்ம நபர்  பினாயில் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவன் பெயர் ஆதித்யா கும்ப்ளே என்பதும், அவனுக்கு 20 வயது என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நபர் அந்த 12 வயது சிறுமியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளான் என்பதும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், அவன் கொலை செய்வதற்கு முன்பு பிரனிதா தாஸ் குறித்து அக்கம் பக்கத்தில் அனைத்து விவரங்களையும் விசாரித்து திட்டமிட்டு கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளான் என்பதும் புலனாகி உள்ளது.

மேலும், இது போன்று சம்பவங்கள் அதிகரிக்காமல் இருக்க போலீசார் அவ்வப்போது ரோந்து வர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு குடியிருப்புக்கு முன்பு நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதி மக்களிடம் மனதில் பீதியையும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

Share this post with your friends