Mnadu News

முலாயம்மறைவுக்கு உ.பியில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு.

முலாயம் சிங் யாதவின் மறைவையொட்டி உத்தரப் பிரதேசத்தில் மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.அதோடு, முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்குகள் உத்தரப் பிரதேசத்திலுள்ள அவர்களின் சொந்த கிராமமான சைஃபாய் பகுதியில் நடைபெறும் என்று சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.

Share this post with your friends