Mnadu News

முலாயம் சிங் மறைவு: காங்கிரஸ் கட்சி இரங்கல்.

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சமாஜ்வாடி கட்சியின் புரவலரும், நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சருமான முலாயம் சிங் யாதவின் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி , காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேர்தல் போட்டியாளருமான சசி தரூர் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends