Mnadu News

முலாயம் மறைவு: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்.

முலாயம் மறைவு குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், உ.பி.யின் முன்னாள் முதல் அமைச்சரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்காக பாடுபட்ட முலாயம் சிங், மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜவாதி தொண்டர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்கில், திமுக சார்பாக பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார்.” என்று தெரிவித்துள்ளார்.
அதோடு;, மதிமுகவின் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends