கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையை, தமிழகம் பராமரித்து வருகிறது. கடந்த 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஏ.எஸ்.ஓகா, சி.டி.ரவிகுமார் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணி செய்ய கேரளா அரசு அனுமதிக்க வேண்டும். அணை பராமரிப்பு விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி 2 வாரத்தில் 2 அரசுகளும் பதில் தர ஆணையிட்டுள்ளனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More