Mnadu News

மெட்ரிக் பள்ளிகளின் விடுமுறை காலம் நீட்டிப்பு!

செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி காலாண்டுத் தேர்வு முடிவடைந்த நிலையில், அக்டோபர் 1 முதல் 5 வரை விடுமுறை அளிக்கப்பட்டு 6ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கு வரும் 9 அன்று வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் திரு. கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். நாளை பள்ளிகளை திறப்பதா அல்லது விடுமுறை தொடர்வதா என்று குழப்பம் நிலவியதை தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டு குழப்பத்தை தீர்துள்ளார்.

Share this post with your friends