சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு
வந்துள்ளது. இதனையொட்டி பயணிகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று
ஒரு நாள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. பயணிகளிம்
வருகை அதிகரிக்கவே பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தில்லி மெட்ரோ இருப்பு வழி கழகத்தின் தலைவராக இருந்த ஸ்ரீதரன் அவர்களால் முன்னாள்
முதல்வர் செல்வி ஜெயலலிதாவிடம் தமிழக மெட்ரோ திட்டத்திற்கான முன்வரைவு
அளிக்கப்பட்டது. ஆனால் அந்த முன்வரைவு அப்போதைக்கு கிடப்பில் போடப்பட்டது.
2006ல் ஆட்சிக்கு வந்த திமுகவால் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதைய
துணைமுதல்வர் முக ஸ்டாலினால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மூன்று வழித்தடங்களில் இயக்கப்படும் இந்த மெட்ரோ இரயில்களின் பணிகள் முழுவதுமாக
இயக்கப்பட்ட நிலையில் பயணிகளுக்காக இன்று ஒரு நாள் இலவசமாக இயக்கப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.