கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியது. இதையடுத்து அணையின் உபரிநீர்ப் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர்திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்து வருவதால், இன்று மேட்டூர் அணையிலிருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால்; கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
.