காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 8 ஆயிரத்து 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது.

இந்தியாவில் 2025க்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி: பிரதமர் மோடி உறுதி.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி ஆயிரத்து 780 கோடி ரூபாய்...
Read More