தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9ஆயிரத்து 644 கன அடியாக சரிந்தது.
இரவு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 20 ஆயிரத்து 626 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 900 கன அடியிலிருந்து வினாடிக்கு 750 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 புள்ளி71 அடியிலிருந்து 119 புள்ளி 40 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 92 புள்ளி 51 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று மாலை மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை நெருங்குவதால் நீர்வளத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More