காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அணை நிரம்பிய நிலையில் ஆணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது. காவிரியை நீர் பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளிலும் திடீர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More