காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை சற்று குறைந்ததல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரத்து 727 கன அடியிலிருந்து 5 ஆயிரத்து 253 கன அடியாக குறைந்துள்ளது.மேட்டூர் அணை நீர்மட்டம் 103 புள்ளி ஐந்து மூன்று கன அடியாக அதிகரித்துள்ளது.அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69புள்ளி நான்கு ஒன்பது டி.எம்.சியாக உள்ளது.மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தாலும் குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More