Mnadu News

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11 ஆயிரத்து 690 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் திறக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர் மட்டம் 118 புள்ளி 75 அடியாகவும் நீர் இருப்பு 91 புள்ளி 49 டிஎம்சியாகவும் உள்ளது.

Share this post with your friends