Mnadu News

மேற்கு வங்கத்திலிருந்து வடக்கு வங்கத்தைப் பிரிக்க சதி: மம்தா அலறல்.

மேற்கு வங்கத்தில் இருந்து வடக்கு வங்கத்தைப் பிரிக்கவே பீகாரிலிருந்து சர்வதேச எல்லைப் பகுதிகளுக்கு வெடிமருந்து மற்றும் ஆயுதங்களை கடத்தும் சதிவேலை நடப்பதாக முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். அதே சமயம் ஆயதங்களை கடத்துவதற்காக மிக முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனை தடுப்பதற்காக மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிலர் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்து வருகிறார்கள். அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Share this post with your friends