Mnadu News

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர், திருக்கோவிலூர் அருகே உள்ள கடகால் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார் (வயது 31), பச்சமுத்து (32). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சு.பில்ராம்பட்டு காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் மேல்சிகிச்சைக்காக விஜயகுமார் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Share this post with your friends

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...

Read More

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் தாவணகெரேவில் பேசிய பிரதமர்,சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக...

Read More