Mnadu News

ம.பி புதிய முதல்-அமைச்சராக மோகன் யாதவ் பதவி ஏற்பு

மத்திய பிரதேசத்தில் கடந்த 17-ந்தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 66 தொகுதிகள் கிடைத்தன.

இதைத்தொடர்ந்து புதிய முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ், அம்மாநில கவர்னர் மங்குபாய் படேலை சந்தித்து புதிய அரசை அமைக்க உரிமை கோரினார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து மோகன் யாதவ் மத்திய பிரதேச முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கான விழா போபாலில் உள்ள லால் பரேட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Share this post with your friends