சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மணிரத்தினம் கூட்டணியில் வெளியாக மாஸ் ஹிட் அடித்த கல்ட் படம் “தளபதி”. இளையராஜா இசை, வசனங்கள், சண்டைக் காட்சிகள் என அனைத்துமே ஒருசேர இப்படத்தை காலத்தால் அழியாத படமாக மாற்றியது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் நடிகர் ரஜினகாந்த் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாகவும் அதற்கு மணி நோ சொன்னதாகவும் இசை வெளியீட்டு மேடையில் ரஜினி ஓபனாக கூறினார். அது பரபரப்பாக பேசப்பட்டது.
பொன்னியின் செல்வனில் வாய்ப்பு இல்லை என்றாலும் ஓகே நீங்கள் வேறு எதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என கூற, அதற்கு மணி ஒரு சிறப்பான ஒன் லைன் கூற அது ரஜினிக்கு பிடித்து உள்ளது என தகவல் கசிந்துள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியான பின்பு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று உலகளவில் ₹440 கோடிகளை அள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.