Mnadu News

“ரத்தமாரே” பாடல் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன், தமன்னா உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் வெளியாகி உள்ள பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளன.

“ஜெயிலர்” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஷோகேஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரல் ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் “ரத்தமாரே” பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில், “ரத்தமாரே” பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன். இப்பாடல் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன். இதுவே என் குழந்தைகள் உயிர் மற்றும் உலகுக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இது போன்ற தருணங்களுக்காக தான் வாழ்கிறோம். இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத்திற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More