மத்ஸ்யகந்தா விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் பயணித்த இளைஞர்கள் 5 பேர் மங்களூருவில் இருந்து மட்கானுக்கு பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தனர். பயணச்சீட்டு குறித்து டிடிஇஆர் விசாரித்தபோது, அந்த 5 இளைஞர்களும் அலட்சியமாக நடந்துகொண்டு, இடையூறு ஏற்படுத்தினர். இது தொடர்பாக டிடிஇஆர் உடுப்பி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இயைடுத்து காவல்துறையினரும்; ரயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு வந்து இளைஞர்களைப் பிடித்து, வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களுக்கு தலா ஒரு மாதம் சிறைத் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும், இடையூறு ஏற்படுத்தியதற்காக தலா 100 ரூபாய் அபராதமும் விதித்து உடுப்பி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More