Mnadu News

ரயில்பாதை பணி நிறைவு: போடி-மூணாறு சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டத்தில், ஏற்கனவே தேனி முதல் மதுரை வரை அகல ரயில்பாதை பணிகள் முடிந்து ரயில் சேவை நடைபெற்று வருகிறது. தற்போது போடி முதல் தேனி வரையிலான அகல ரயில்பாதை பணி வேகமாக நடைபெற்று வருகிறது. போடி-தேனி வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் போடி மூணாறு சாலையின் குறுக்காக ரயில் தண்டவாளங்கள் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக போடி மூணாறு சாலையில் நேற்று நள்ளிரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை மூன்று மணி நேரம் இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு போடி மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் 20 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளங்களை இணைத்தனர். இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் போடி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. தண்டவாளம் அமைக்கப்பட்ட் ஒரு பகுதியில் மட்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

Share this post with your friends