Mnadu News

ரயில் விபத்துக்களின் சதவீதம் குறைவு! மத்திய பழங்குடியின அமைச்சர் தகவல்!

மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முந்தா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ ரெயில்வே பாதுகாப்பில் குறித்து ஒன்பது ஆண்டு கால மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் : “சென்ற 22 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சம்பவங்களை ஆராய்ந்தால், 2000-01  473 473 ஆக இருந்த ரெயில் விபத்துகள், 2022-23  நிதியாண்டில் 48 ஆக குறைந்துள்ளது. அதாவது கடந்த 22 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் 90% வரை குறைந்துள்ளது என்றார். ரெயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே பல முக்கியமான நடவடிக்கைகளை செயலாக்கம் செய்துள்ளது என்றார்.

கடந்த 2017-18-ம் நிதியாண்டில் ‘ராஷ்ட்ரிய ரெயில் சன்ரக்ஷா கோஷ்’ என்ற திட்டத்தின் கீழ் முக்கிய ரெயில் பாதுகாப்பு சொத்துக்களை மாற்றுதல், புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவைகளுக்காக பெரும் நிதி ஒதுக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கான இந்த 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி கணிசமான முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது என பெருமிதமாக தெரிவித்தார்.

Share this post with your friends