Mnadu News

ரஷியாவில் பயங்கர விபத்து! இராணுவ விமானம் கட்டிடத்தில் மோதியது! பலர் பலி!

ரஷ்யாவின் தென்மேற்கே உக்ரைனுக்கு அருகே உள்ள எயிஸ்க் நகரின் ஒரு குடியிருப்புக் கட்டிடம் மீது, ரஷிய ராணுவ விமானம் ஒன்று யாரும் எதிர்பாராத நேரத்தில் தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது.

தீ பிடித்ததில் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9 வது தளம் வரை தீ மளமளவென பற்றியது. இதில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில், சுமார் 360 பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சுகோய்-34 ரக ஜெட் போர் விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இதில் விமானி குதித்து உயிர் பிழைத்து விட்டார்.

இந்நிலையில் இந்த கொடூர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட மொத்த 13 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புப்படை அதிகாரிகள் தரப்பில்
கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends