Mnadu News

ராகுலுக்கு நம் ராணுவத்தின் மீது நம்பிக்கையில்லை:அனுராக் விமர்சனம்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் விதமாக டெல்லியில் பாஜக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியதாவது, இந்தியா – சீனா – பூடான் எல்லையிலுள்ள டோக்லான் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் எல்லைப் பகுதியில் ஆயுதங்களைக் குவித்தபோது, நம் வீரர்கள் உறுதியுடன் எதிர்த்து நின்றனர். ஆனால் ராகுல் காந்தி அந்த சமயம் சீன அதிகாரிகளை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். இந்திய ராணுவத்தினர் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தும்போது கூட ராகுல் காந்தி அதன் மீது கேள்வி எழுப்பினார். இது 1962ஆம் ஆண்டு இருந்த இந்தியா அல்ல, இது 2014 இந்தியா. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா முன்னோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. அதே சமயம், காங்கிரஸ் கட்சிக்கும், ராகுலுக்கும் நம் ராணுவத்தின் மீது நம்பிக்கையில்லை என்ற அமைச்சர் அனுராக் தாக்குர் , ஐக்கிய முற்போக்குக் கூட்டணி புல்லட் ஜாக்கெட்டுகளையும், ஜெட் விமானங்களையும் ராணுவத்திற்காக வாங்கவில்லை. ஏன் ராணுவ வீரர்களுக்காக குளிர்கால பூட்ஸைக் கூட வாங்கவில்லை. ஆனால் இதையனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளன.
ராணுவத்துக்குத் தேவையான 300க்கும் அதிகமான கருவிகளை இந்தியா தற்போது தயாரிக்கிறது. இந்தியா தற்போது வெளிநாடுகளுக்கு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. தற்சார்பு இந்தியா திட்டம் அதற்கான அடித்தளம். டோக்லாம் விவகாரத்தின்போதும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் சென்று எல்லைப் பகுதிகளை பார்வையிட்டனர் எனக் குறிப்பிட்டார்.

Share this post with your friends