Mnadu News

ராகுல்காந்தி 2 தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயம்!

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் அவர் அமோக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் அவர் 2 தொகுதிகளில் ஏதாவது ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அது வயநாடா அல்லது ரேபரேலியா என்பது பற்றி இன்னும் உறுதியாக தெரியவில்லை. 2 தொகுதிகளில் வெற்றி பெறும் எந்தவொரு வேட்பாளரும், தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியை கைவிட வேண்டும் என்று நாடாளுமன்ற முன்னாள் பொதுச் செயலாளரும், அரசியலமைப்பு நிபுணருமான பி.டி.டி.ஆச்சாரி தெரிவித்துளளார்.

மேலும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகள் காலியாக இருந்தால், ராஜினாமா கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பலாம் என்று தெரிவித்த அவர், ஒரு உறுப்பினர் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்யத் தவறினால், அவர் இரண்டு தொகுதிகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share this post with your friends