நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் செவிலியர் ஒருவர், குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பாக போனில் ஒருவருடன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அமுதவள்ளி. அவர் செவிலியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். அவரிடம் குழந்தைகளின் விலை தொடர்பாக தருமபுரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .மேலும் 2 குழந்தைகளை கொல்லிமலையில் விற்றதாக வாக்கு மூலம் கொடுத்தனர் .